Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரபல டிவி நடிகை கொலையா?; போலீஸ் விசாரணை

டிசம்பர் 09, 2020 05:36

சென்னை: 

திருவான்மியூரை சேர்ந்தவர் சித்ரா (29). டிவி நடிகை. தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சித்ரா நடிகை, மாடலிங், டான்சர், பாடகர், உளவியலாளர், என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இறுதியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்காக சித்ரா சென்னை அருகேயுள்ள நாசரேத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். அவருடன் ஹேம்நாத்தும் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் தூக்கிட்ட நிலையில் சித்ராவின் உடல் தனியார் விடுதி அறையில் இருந்து இன்று மீட்கப்பட்டது. சித்ராவின் முகத்தில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் பல கோணங்களில் சித்ராவின் அறையில் தங்கி இருந்த ஹேம்நாத்திடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்